மனம் விரும்புவதையெல்லாம் பேசுபவன், மனம் வெறுப்பதையெல்லாம் கேட்க நேரிடும்.
ஆயிரம் உபதேசங்களைவிட ஒரு அனுபவமே சிறந்த பாடத்தை கற்றுத்தரும்.
ரத்தத்தில் கைகளை நனைத்தவன். தன்னுடைய கண்ணீரால்தான் அதை கழுவ வேண்டும்.
ஒரே ஒரு துறை சார்ந்த புத்தகம் படித்தவனிடமிருந்து கடவுள் நம்மை காப்பாராக…
ஒருமனிதன் அறிவாளியா இல்லையா என்பதனை அறிய அவன் தரும் பதில்களை பார்க்காதே அவன் தொடுக்கும் கேள்விகளை பார்.
கால்களால் பறவைகள் வலைகளில் சிக்கிக்கொள்கின்றன. ஆனால் மனிதனோ நாவினால் (க)வலைகளில் சிக்கிக்கொள்கிறான்.
ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்துகொண்டால் பின் அவனைப்பற்றி முழுமையாக அறிந்துகொள்வது கடினமன்று.
தோல்வி என்பது கொஞ்சம் தள்ளிபோடப்பட்டிருக்கும் வெற்றி அவ்வளவுதான். இதில் கவலைகொள்வதற்கு எதுவுமில்லை.
ஒவ்வொருவரும் உலகத்தைத்தான் மாற்ற நினைக்கிறார்களே ஒழிய தன்னை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.
எப்போதும் அச்சத்தில் ஒளிந்து கொள்வதைவிட ஆபத்தை ஒருதடவை நேருக்குநேர் சந்திப்பது மேல்.
அடங்கி போவதற்கு முன்னால் ஒரு தடவையாவது அடக்கிப் பார்த்துவிடு… முடிவாக உன் கால்கள் முடங்கியே போனாலும்கூட…
மரணத்தை பற்றி நீ கவலைப்பட வேண்டியதே இல்லை. ஏனெனில் நீ இருக்கும்வரை அது உன்னிடம் வரப்போவதில்லை, அது வந்தபிறகு கவலைபட நீ இருக்கப்போவதில்லை. பின் ஏன் இந்த கவலை.
முட்டாளின் முழு ஆயுளும், அறிவாளியின் ஒருநாள் ஆயுளுக்கு சமம்.
எல்லோரையும் திருப்திப்படுத்த நினைப்பவன் வாழ்க்கையில் ஒருபோதும் வெற்றிபெற மாட்டான்.
மரியாதைக்கு விலை கிடையாது. ஆனால் அது அனேகரை விலைக்கு வாங்கும்.
கரட்டுநிலத்தில் விவசாயம் செய்ய பிராத்தனைகள் தேவையில்லை. நல்ல கடப்பாறை இருந்தால் போதும்.
ஓநாய்கள் உன்னை விருந்துக்கு அழைத்தால் உன் நாயும் உன் கூடவே இருக்கும்படி பார்த்துக்கொள்.
வாழ்க்கை என்பது ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு ஊசலாடுவது அல்ல. அது ஆழ்கடலில் புயலுக்கு நடுவே படகை செலுத்துவது போன்றது. எனவே மனஉறுதியும் திறமையும் உள்ளவன் மட்டுமே வாழ்வில் வெற்றியடைகிறான்.
புறாவின் இளமையை காட்டிலும் கழுகின் முதுமையே வலிமை வாய்ந்தது.
செல்வம் என்பது வருமானத்தை பொறுத்தது அல்ல. நிர்வாக திறமையை பொறுத்தது.
மனிதனின் முயற்சியை விட சூழ்நிலைகள் சிலநேரங்களில் வெற்றியை கொண்டுவருவதுண்டு.
நீங்கள் முடியவே முடியாது என்று சொல்வதையெல்லாம் இந்தஉலகில் பிறிதொறு இடத்தில் யரோ ஒருவர் திறம்பட செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
இருக்கின்ற ஜாதிகளை ஒழிக்க பாடுபடும் அதேவேளையில் படித்த ஜாதி, படிக்காத ஜாதி என புதிதாக இரு ஜாதிகள் உருவாகிவிடாமல் பார்த்துகொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையுமாகும்.
நாடு முன்னேற வேண்டுமென்றால் முதலில் வறுமையும், அறியாமையும் நீங்க வேண்டும்.
செல்வந்தன் ஒருவன் சுவர்கத்திற்கு நுழைவதை காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது.
வீடில்லாத மனிதன் கூடில்லாத பறவைபோன்றவன் எனவே சின்ன வீடாக இருந்தாலும் அது சொந்த வீடாக இருக்க வேண்டும்.
சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம். அறுவடை மோசமானால் 1 வருடம் நஷ்டம். திருமணம் மோசமானால் உன் ஆயுள் அம்புட்டும் நஷ்டம்.
நானும் இளவரசன் நீயும் இளவரசன் என்றால் யார்தான் இந்த கழுதைகளை மேய்ப்பது?
உன்னால் நடக்கமுடியுமென்றால் ஆடவும் முடியும், உன்னால் பேச முடியுமென்றால் பாடவும் முடியும்.
அது ஒரு காளை என்கிறேன்… நீயோ பால்கறந்து காட்டு அப்போதுதான் நம்புவேன் எங்கிறாய்.
பூனைக்கு தாராளமாக உணவளித்தால் எலிகள் வந்து உன்னிடம் சொந்தம் கொண்டாடும்.
நோய் வரும் அளவிற்கு தின்பவர்கள் நோய் நீங்கும் வரை உண்ணா நோன்பு இருக்கவேண்டி வரும் .
பிறரின் குற்றங்களில் மட்டுமே கவனம் செலுத்துபவர்கள். தங்களுடைய குறைகளை குணப்படுத்த முடியாமல் தவிப்பார்கள்.
மரத்தடியில் ஆளில்லாதபோதுதான் இறைவன் தேங்காயை விழ செய்கிறான்.